11/24/2008

இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே பெரும் சாதனை



- கலைஞர் கருணாநிதி
திகதி: 24.11.2008











"எனது எல்லா சாதனைகளையும் விட, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதையே பெரும் சாதனையாகக் கருதுகிறேன்'' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு ""வாழ்நாள் சாதனையாளர்'' விருது வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கலை, இலக்கியம், சினிமா, பத்திரிகை ஆகிய ஊடகங்களின் வழியாக அவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்டு கருணா நிதி ஆற்றிய ஏற்புரை: "இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் தினம் தினம் கொல்லப்படுவது தொடர்கிறது. அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த இயலாத பரிதாப நிலையில் உள்ளோம். இந்தச் சூழலில் நான் இந்த விருதினைப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது அல்ல. எனது சாதனைகளைப் பாராட்டி இந்த விருது வழங்குவதாகக் கூறுகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அமைதியான வாழ்வினை ஏற்படுத்தித் தர முடிந்தால் அதையே எனது பெரும் சாதனையாகக் கருதுவேன்.
விழாவுக்கு அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஸ்தனிஸ்லாஸ் ஃபெர்னாண்டோ தலைமை வகித்து, விருதினை வழங்கினார். பத்திரிகை சேவையைப் பாராட்டி "இந்து' நாளிதழ் ஆசிரியர் என்.ராமுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கொங்கிரஸ் கட்சி ""கொறடா'' பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்திப் பேசினார். விழாவில், பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, திருச்சி ஆயர் டோனிடி வோட்டா, சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய இயக்குநர் வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக 10 இலட்சம் ரூபா முதல்வரிடம் வழங்கப்பட்டது

0 comments:

நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.